Uncategorized

போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது..? – சட்டசபையில் காரசார விவாதம்

ப த ப ப ர ள பழக - நான்கு நாட்கள் விடுமுறையின் பின் தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் மீண்டும் செயல்பாட்டில் நுழைந்தது. துறைவாரிய மானியக் கோரிக்கை விவாதங்கள்

Desk Uncategorized
Published अगस्त 17, 2026
Reading time 1 minutes
Conversation No comments
CHENNAI-11-1
Foto : Michael Jones - hindinewslive247.com
Table of Contents
  1. சட்டசபையில் மாணவர் கொலை-போதைப்பொருள் விவாதம்: கட்சிகள் மோதல்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

சட்டசபையில் மாணவர் கொலை-போதைப்பொருள் விவாதம்: கட்சிகள் மோதல்

Hindinewslive247.com – ப த ப ப ர ள பழக – நான்கு நாட்கள் விடுமுறையின் பின் தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் மீண்டும் செயல்பாட்டில் நுழைந்தது. துறைவாரிய மானியக் கோரிக்கை விவாதங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் நாளில் பேரிடர் மேலாண்மை, இயற்கை சீற்ற துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, வருவாய் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்படுகின்றன.

கவன ஈர்ப்பு தீர்மானம்: மாணவர் கொலை, கர்நாடக சம்பவம்

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றை மன்றத்தில் விவாதிக்க திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் சமர்ப்பித்தன.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குரல்

“கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு தான் கொலைக்கு காரணம் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

கர்நாடக சம்பவம் குறித்தும் விவாதம் தேவை என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். எண்ணூர் ஆற்றில் மீன்கள் கொத்துக்கொத்து இறந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுக, பாமக, சிபிஎம் எம்.எல்.ஏ.கள்

அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேசுகையில்:

“20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் அடித்து கொலை. கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஒருவரை 25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்? பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.”

பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில்:

“கோவை மாணவர்கள் கொலை வழக்கில் காவல்துறை விளக்கம் ஏற்புடையதல்ல. கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது வேதனை. பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் எளிதாக கிடைக்கிறது. கடந்த ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோ, இந்த ஆட்சியிலும் போதை பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் இன்றும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசு வெளிப்படைத்தன்மையுடன் விராசணை நடத்த வேண்டும்; அமுதன் மற்றும் தனுஷ் கொலை குறித்து ஓய்வுப்பெற்ற ஸ்ரீதியரசர் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.”

சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி பேசுகையில்:

“கோவையில் கடந்த 10 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்றால் காவல்துறையில் களை எடுக்க வேண்டும்.”

அமைச்சர் விளக்கங்கள்

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்:

“மாணவர் கொலை வழக்கு போதைப் பொருள் புகார் தொடர்பானது இல்லை; உண்மை நிலவரத்திற்கு மாறாக வழக்கை திசை திருப்ப வேண்டாம். எதிர்க்கட்சிகள் கூறியது போல எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. கோவை மாணவர் கொலையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் கொலை என்பது தவறு. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.”

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடர்ந்து பேசுகையில்:

“பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குழந்தைகள். நேர்மையான முறையில் விசாரணை நடத்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் அரசு பங்கெடுக்கிறது. மாணவர்கள் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடக்கிறது. கோவை மாணவர் கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். கல்வி நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை. மாணவர் தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும். தவெக அரசை பொறுத்தவரை நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; இனி இது போல எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.”

போதைப்பொருள்-அமைச்சர் தொடர்பு: காரசார மோதல்

போதைப் பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கு திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஜாபர் சாதிக்கு மீதான குற்றச்சாட்டு வந்தபோது அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் உங்கள் அமைச்சர் ஒருவர் மைதானத்தில் பவுடர் வைத்திருந்தார். அதை உலகமே பார்த்திருக்கிறது. அது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பினார்.

Frequently Asked Questions

What is ப த ப ப ர ள பழக?

ப த ப ப ர ள பழக is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ப த ப ப ர ள பழக matter?

ப த ப ப ர ள பழக matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment