தமிழக காடுகளில் 3,170 யானைகள் – அரசு தகவல்
தமிழகத்தில் யானை பாதுகாப்புக்கு அரசு உறுதி
Hindinewslive247.com – உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதில் அரசு முன்னணியில் உள்ளது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகஸ்டு பன்னிரண்டாம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தத் தினத்திற்கு ஏற்ப, யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவதும், மனிதயானை மோதல்களைக் குறைப்பதும் முக்கிய இலக்காக அமைந்துள்ளது.
கணக்கெடுப்பு முடிவுகள்
2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யானை கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் மொத்தம் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகள் வாழும் இடங்கள், கேரளா மற்றும் கர்நாடகாவின் வனப்பகுதிகளுடன் இயற்கையாக இணைந்துள்ளன. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான யானை வாழ்விட நிலப்பரப்பு விரிவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 9.1 லட்சம் எக்டேருக்கும் மேற்பட்ட பரப்பளவில் ஐந்து யானை காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் மனிதவனவிலங்கு மோதல்களைத் தடுக்க, இந்த ஆண்டு ரூ.20 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யானை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் பங்கு
யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் பொறுப்பு மட்டுமல்ல. பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பாதுகாப்போம் யானைகளை, காடுகளைப் பாதுகாப்போம். வனத்துறையுடன் இணைந்து மனிதயானை நல்லிணக்கத்தை உருவாக்குவோம் என்ற உறுதியை அனைவரும் ஏற்போம்.
இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல், மனிதயானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
Related Reading
Frequently Asked Questions
What is தம ழக க ட கள ல 3?தம ழக க ட கள ல 3 is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does தம ழக க ட கள ல 3 matter?தம ழக க ட கள ல 3 matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.