Uncategorized

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம்; மக்களவையில் மசோதா நிறைவேறியது

ய ப ஐ பர வர த தன - நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் பதினான்காவது நாள் அமர்வில், யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் நிர்ணயிக்க உரிமம்

Desk Uncategorized
Published अगस्त 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Elizabeth Brown - hindinewslive247.com
Table of Contents
  1. யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் கட்டணம் வசூலிப்பதற்கு மக்களவை ஒப்புதல்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் கட்டணம் வசூலிப்பதற்கு மக்களவை ஒப்புதல்

Hindinewslive247.com – ய ப ஐ பர வர த தன – நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் பதினான்காவது நாள் அமர்வில், யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் நிர்ணயிக்க உரிமம் அளிக்கும் மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. காலை பதினொரு மணிக்கு மக்களவை கூடியதும், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாயி நகரங்களில் ஏற்பட்ட அணு விபத்து நினைவு தினத்தை முன்னிட்டு, அந்தத் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பிறகு கேள்வி நேரம் தொடங்கியபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பலர் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். இந்தக் குழப்பத்தால் சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில் அமளி

மாநிலங்களவை காலை பதினொரு மணிக்கு கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பகல் பன்னிரண்டு மணி வரை அவையை ஒத்திவைத்தார். பின்னர் பன்னிரண்டு மணிக்கு கூடியபோது, நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு இடையே விவாதம் நடந்தது. அமளி காரணமாக பிற்பகல் இரண்டு பதினைந்து மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மசோதா தாக்கல் மற்றும் அதன் முக்கியத்துவம்

பிற்பகல் இரண்டு மணிக்கு மக்களவை மீண்டும் கூடியது. அப்போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்தம்) மசோதா-2026ஐ தாக்கல் செய்தார். இந்த மசோதா, 2007-ம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், 2025-ம் ஆண்டின் வருமானவரி சட்டம் மற்றும் 2026-ம் ஆண்டின் நிதிச்சட்டம் ஆகியவற்றை மேலும் திருத்துகிறது.

பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் மற்றும் வருமான வரி சட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை நீக்குகிறது. அது போல யு.பி.ஐ. மற்றும் ரூபே அட்டை பரிவர்த்தனைகளுக்கான பூஜ்ஜிய வணிகர் தள்ளுபடி கட்டணம் (எம்.டி.ஆர்.) என்ற கட்டமைப்பை மாற்றிய மைக்க அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கிறது.

தற்போது, யு.பி.ஐ. மற்றும் ரூபே அட்டைகள் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு பயனாளர்களிடம் வங்கிகளோ அல்லது கட்டணச் சேவை வழங்குபவர்களோ எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இது இனி மாறும் என தெரிகிறது. ஆனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டணம் பிடிப்பதற்காக, பணம் அனுப்புவதில் ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில விஷயங்களில் வரிச்சலு கையை மேலும் அதிகரிக்கவும், காலத்தை நீட்டிக்கவும் மசோதா வழி செய்கிறது.

மசோதா நிறைவேற்றம்

இந்த மசோதாவை விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்கிற காரணத்தால் அதன் மீது விவாதம் நடத்தாமலேயே மசோதா நிறைவேற்றத்துக்காக குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே மாநிலங்களவை இரண்டு பதினைந்து மணிக்கு கூடியதும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி ஒதுக்கீட்டு மசோதாவை (3-வது எண்) தாக்கல் செய்தார். இது மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி முடிவடைந்த நிதியாண்டில், அனுமதிக் கப்பட்ட தொகையை தாண்டிச் செலவிடப்பட்ட குறிப்பிட்ட சேவைகளுக் கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி யில் இருந்து நிதி ஒதுக்கீட்டை செய்ய இந்த மசோதா வழி செய்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, மக்கள் வைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

Frequently Asked Questions

What is ய ப ஐ பர வர த தன?

ய ப ஐ பர வர த தன is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ய ப ஐ பர வர த தன matter?

ய ப ஐ பர வர த தன matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment