மாம்பழம் இனிக்கிறது!..மாம்பழ விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் கசக்கிறது! ஏன்? – வேல்முருகன்
மாம்பழம் இனிக்கிறது!..மாம்பழ விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் கசக்கிறது! ஏன்?
ம ம பழம இன க க றத - சென்னையில் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளது:- கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், மாம்பழ சாகுபடி மக்களின் வாழ்வாதாரமாக செயல்படுகின்றன. ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்து விளைவிக்கும் இந்த விளைபொருளுக்கு, அறுவடை நேரத்தில் நியாயமான விலை உறுதியாக இல்லாத நிலை தொடர்கிறது.
விதைப்பதில் இருந்து அறுவடை வரை ஒவ்வொரு நாளும் செலவு, உழைப்பு மற்றும் காலநிலை ஆபத்து எனப் பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானம், சில இடைத்தரகர்களின் மனநிலையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
நியாயமற்ற விலையின் பின்னணி
நெல், கோதுமை, பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கின்றது. கரும்புக்கு மாநில அரசுகள் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை இருக்கிறது. இதை உழைப்புக்கான நியாயமான வருமானத்தை உறுதி செய்வதற்கான முறையாக கருதும் நிலையில், மாம்பழம் மற்றும் மாங்காய் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படவில்லை.
மாம்பழ உற்பத்தியில் நாடு முழுவதும் முன்னணி இடத்தைப் பெற்றுள்ள தமிழகத்தின் மாம்பழம் மற்றும் மாங்காய் விளைபொருள்களுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட விலைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை தொழிலாக செயல்படுகின்றன. ஆனால், அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கவில்லை. இதனால் உற்பத்தியாளர்களின் மனநிலையை பாதிக்கிறது.
மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.