திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் அரசியல் அத்துமீறல்கள் – சீனு ராமசாமி குற்றச்சாட்டு
திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் அரசியல் அத்துமீறல்கள் - சீனு ராமசாமி குற்றச்சாட்டு
த ர ப பட எழ த த - திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தேர்தல் நடைமுறைகளில் அரசியல் அத்துமீறல்கள் இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள் தேர்தலின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தேர்தல் வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு கடந்த 12ம் தேதி நடைபெற இருந்தது, அதன் பின்னர் தலைவராக இருந்த கே.பாக்கியராஜின் மறைவு காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போதைய தேர்தல் நடைமுறைகளில் இரு போட்டியிடும் அணிகள் விவாதிக்கப்படுகின்றன. இதில் வி.சி.குகநாதனின் தலைமையில் 'திரைக்கதை மன்னன் கே.பாக்கியராஜ்' என்ற அணியும் சேரனின் தலைமையில் 'நம்ம கே.பாக்கியராஜ்' என்ற அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் கே.பாக்கியராஜ் பெயரில் மட்டுமே போட்டியிடுகின்றன. பொதுச்செயலாளர் பதவிக்கு மனோஜ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு லியாகத் அலி கான், ஆர்.சுந்தர் ராஜன் ஆகியோர் மோதினர். இணைச்செயலாளர் பதவிக்கு 8 பேரும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் போட்டியிடுகின்றனர்.
"திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் ஒரு ஜனநாயகத் திருவிழாவாக இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள் தேர்தலின் நம்பகத்தன்மையையும், உறுப்பினர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையையும் கடுமையாக கேள்விக்குறியாக்கியுள்ளன. என் சந்தா நிலுவையில் இருந்தபோது, வேட்பாளர் கே.பி.பி. நவீன் அவர்கள் என் சார்பாக அந்தத் தொகையைச் செலுத்தினார். என் 30 ஆண்டுகால நண்பர் என் திரைப்படங்களின் நடித்தவர். அசோசியேட் ஆக வேலை செய்தவர். அதற்காக சொன்னார், 'சரி நான் வந்து விடுகிறேன்' என்றேன். அதற்கான தொகையை நான் அவரிடம் உடனடியாக வழங்கிவிட்டேன். இது எங்களின் தனிப்பட்ட புரிதல் மற்றும் உரிமை. ஆனால், இந்�