சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ச ற ம ப ல யல வன - மேற்கு வங்காளத்தின் தெற்கு பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சூர்யபூர் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 4ம் தேதி மாலை தனது தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு பரிசு வாங்க கடைக்கு சென்றாள். பின்னர் அவளை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அவளை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி குளத்தின் அருகில் வீசியுள்ளனர்.
இந்த வியூகத்தின் மூலம் மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறுமியை கொலை செய்த கும்பலில் ஒருவனை பொதுமக்கள் தாக்கிவிட்டு கொன்றனர். மேலும் பிரபேஷ் மிண்டல் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அனந்த சர்தார், பிரபேஷ் மிண்டல், திபகர் சர்தார் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். இன்று நள்ளிரவு பிரபேஷ் மிண்டல் விசாரணைக்காக போலீசாரால் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது போலீசார் மீது தாக்கிய பிரபேஷ் மிண்டல் தப்பியோட முயன்றார். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார்.