Uncategorized

“கோவை நகரம் பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா?” – தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

க வ நகரம ப க ஸ த - தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பாஜக மற்றும்

Desk Uncategorized
Published अगस्त 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
chn
Foto : Elizabeth Johnson - hindinewslive247.com
Table of Contents
  1. ஐகோர்ட்டு நீதிபதிகள் கோவை நகரத்தைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ஐகோர்ட்டு நீதிபதிகள் கோவை நகரத்தைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்

Hindinewslive247.com – க வ நகரம ப க ஸ த – தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பாஜக மற்றும் திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லாதபோது, த.வெ.க.வுக்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கோவை நகரம் பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா? தேசியக் கொடியுடன் பேரணி செல்வது பாவமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அவசர வழக்குத் தொடுப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பாஜக சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவசர வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கோவையின் முக்கிய வீதிகளில் பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டோம்.

கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது. அதன் பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளை பரிந்துரைத்தோம்.

அதிகாரிகளுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.

காவல் துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்று ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்தார்.

நீதிபதிகளின் உத்தரவு

இன்று நடந்த இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பாஜகவுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா? கோவை நகரம் என்ன பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ இருக்கிறதா? தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச் செயலா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

Frequently Asked Questions

What is க வ நகரம ப க ஸ த?

க வ நகரம ப க ஸ த is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க வ நகரம ப க ஸ த matter?

க வ நகரம ப க ஸ த matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment