HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

கிரிப்டோகரன்சியாக மாற்றித்தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 12 பேர் கைது

Published जून 27, 2026 · Updated जून 27, 2026 · By Elizabeth Johnson

கிரிப்டோகரன்சியாக மாற்றித்தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 12 பேர் கைது

க ர ப ட கரன ச ய - பெங்களூரின் சஞ்சய் நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வாஸ், இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தனியாக டீக்கடை தொடங்க முயற்சி செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ஒரு நபர், ஜப்பானில் பொருட்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதன் பேரில் விஸ்வாஸ் ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்த முயற்சியில் ஜப்பானில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், இந்திய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி விஸ்வாஸ் ரூ.17.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிரிப்டோகரன்சியாக மாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அப்போது அவரை மறித்த கும்பல், பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.

மோசடி தொடர்பான புகாருடன் விசாரணை

இதுகுறித்து விஸ்வாஸ் உடனடியாக சஞ்சய் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மொத்தம் 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13.5 லட்சம் ரொக்கம், ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 13 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

“டைல்ஸ், அழகு பொருட்கள் மற்றும் டீக்கடைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும், ஜப்பானில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.”

“இந்திய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்ற வேண்டும் என்று �