இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக இன்று பல
Table of Contents
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
Hindinewslive247.com – தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக இன்று பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை இருக்கலாம்.
தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழைக்கு உள்ள மாவட்டங்கள்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மித முதல் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Related Reading
Frequently Asked Questions
What is இரவ 10 மண வர 19 ம வட?
இரவ 10 மண வர 19 ம வட is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does இரவ 10 மண வர 19 ம வட matter?
இரவ 10 மண வர 19 ம வட matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
