Uncategorized

ஜப்பானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட என்ன காரணம்?

ஜப ப ன ல த டர ந - உலகின் மிகவும் நில அதிர்வு ஏற்படும் நாடுகளில் ஜப்பான் முன்னணியில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் புவித்தட்டு அமைப்புதான். பெரிய

Desk Uncategorized
Published जुलाई 29, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Betty Williams - hindinewslive247.com

ஜப்பானில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

Hindinewslive247.com – ஜப ப ன ல த டர ந – உலகின் மிகவும் நில அதிர்வு ஏற்படும் நாடுகளில் ஜப்பான் முன்னணியில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் புவித்தட்டு அமைப்புதான். பெரிய புவி மேலோட்டு தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதும், ஒன்றுக்கொன்று கீழே நழுவிக் கொள்வதும், உராய்ந்து கொள்வதும் தொடர்ந்து நடக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் காரணமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜப்பானில் நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

பசிபிக் நெருப்பு வளைய மண்டலத்தில் அமைந்துள்ள நிலை

ஜப்பான் பசிபிக் நெருப்பு வளைய மண்டலத்திற்குள் அமைந்துள்ளது. பசிபிக் தட்டு, பிலிப்பைன் கடல் தட்டு, யூரேசிய தட்டு (அமூர் தட்டு எனவும் அழைக்கப்படுகிறது), மற்றும் வட அமெரிக்க தட்டு (ஒகோட்ஸ்க் தட்டு) ஆகிய நான்கு புவித்தட்டுகளின் சந்திப்புப் புள்ளியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்த தட்டுகள் ஆண்டுதோறும் சில சென்டிமீட்டர்கள் வரை மட்டுமே நகர்ந்தாலும், நிலத்தடியில் கணிசமான அழுத்தத்தை உருவாக்குகின்றன.

அந்த அழுத்தம் அதிகரிக்கும்போது பூமி அதிரத் தொடங்குகிறது. சில சமயங்களில் மக்களால் உணர முடியாத அளவுக்கு பலவீனமான அதிர்வுகள் வெளிப்படுகின்றன. அதேபோல், மண் சரிவு, வலுவான நிலநடுக்கம், மற்றும் சுனாமி போன்ற பேரழிவுகளையும் இது ஏற்படுத்தக்கூடும்.

புவித்தட்டுகளின் மோதல் மற்றும் உள்வாங்கல்

இரண்டு தட்டுகள் மோதும்போது, ஒரு தட்டு மற்றொன்றின் கீழ் தள்ளப்பட்டு புவி மேலோட்டிற்குள் மூழ்குகிறது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் பசிபிக் தட்டு கீழே உள்வாங்கப்படுகிறது. அதேபோல், தெற்கே பிலிப்பைன் கடல் தட்டு தென்மேற்கு ஜப்பானில் உள்வாங்கப்படுகிறது. இந்த இரண்டு உள்வாங்கல் மண்டலங்களும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.

2011-ம் ஆண்டில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமியைத் தூண்டியது. புகுஷிமா அணு உலை விபத்து ஏற்படவும் இது வழிவகுத்தது.

அதற்கு முன்பு நடந்த முந்தைய பேரழிவுகளில், 1923-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் கடுமையானது. அந்த நிலநடுக்கம் டோக்கியோ மற்றும் யோகோஹாமா நகரங்களை பேரழிவுக்குள்ளாக்கியது.

நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டிடங்கள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள்

ஜப்பானில் நிலநடுக்கங்களைத் தடுக்க முடியாது என்றாலும், பாதிப்பைக் குறைப்பதற்கு அந்த நாடு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்புகளை நிறுவிக்கொண்டிருக்கிறது. வானளாவிய உயரத்திற்கு எழுப்பப்படும் கட்டிடங்கள் கூட அதிர்வு உறிஞ்சுகள், நெகிழ்வான அடித்தளங்கள், உறுதியான பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. அவை நிலநடுக்கங்களால் இடிந்து விழுவதற்குப் பதிலாக மெதுவாக அசைந்து அதிர்வைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

பூகம்ப முன் எச்சரிக்கை அமைப்பு பூகம்ப எச்சரிக்கை விடுக்கும் அதிநவீன அமைப்புகளில் ஒன்றையும் ஜப்பான் கொண்டுள்ளது. அவை பேரழிவை ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முன்னதாகவே நில அதிர்வு அலைகளைக் கண்டறிகின்றன. மக்களுக்கும் உடனடி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஜப்பானிய அதிவேக ரெயிலான ஷிங்கன்சென், சக்திவாய்ந்த பூகம்பங்களைக் கண்டறியும்போது தானாகவே வேகத்தைக் குறைத்து நின்றுவிடும் திறன் கொண்டது.

பொதுமக்களிடையே இயற்கை அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்வியலில் ஆழமாக வேரூன்றியுள்ளது. வீடுகளில் தண்ணீர், உணவு, தீப்பெட்டிகள், மின்கலங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பேரிடர் பாதுகாப்பு பெட்டிகளைத் தவறாமல் சேமித்து வைக்கின்றனர்.

ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மென்மையான அதிர்வாக இருக்கும். எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் கணிசமான எண்ணிக்கையில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

Leave a Comment