காதல் திருமணம் செய்த மகளின் காலை பிடித்து கதறி அழுத பெற்றோர் – வைரல் வீடியோ
க தல த ர மணம ச ய – திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டேரி லாரி செட் பகுதியைச் சேர்ந்த காளி மற்றும் பிரவீனா என்ற குடும்பத்தின் பெற்றோர் இந்த விவகாரத்துக்கு காரணமாக இருந்தனர். அவர்களது மகளான திவ்யதர்ஷினி (19) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த காதல் விவகாரம் திவ்யதர்ஷினியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் தங்களது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை பொருட்படுத்தாத திவ்யதர்ஷினி கடந்த நான்காம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி பெருமாளுடன் சென்று விட்டார். பெருமாள் என்ற கணவன் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகரில் ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வருகிறார்.
இருவரும் ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
படிக்க வைத்து ஆளாக்கி அழகுப்பார்த்த எங்களுக்கு இப்படி துரோகம் செய்து விட்டாயே
என கதறிய திவ்யதர்ஷினியின் தாய் பிரவீனாவும் தந்தை காளியும், மகளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு மகள் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் தந்தை மகளின் காலை பிடித்து ‘எங்களுடன் வீட்டுக்கு வந்து விடு’ என கெஞ்சியபடி கதறினர்.
அப்போது போலீசார் இருவரையும் நிலையில் இருந்து வெளியேற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து திவ்யதர்ஷினியின் பெற்றோரும், உறவினர்களும் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் திடீரென உருண்டு புரண்டு கதறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பெருமாளுடன் திவ்யதர்ஷினியை விருப்பத்தின் பேரில் இரவு 9.30 மணிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காளி-பிரவீனா மற்றும் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து அழுதுக் கொண்டே சென்றனர்.
